இலங்கையின் முன்னணி கல்வி நிறுவனமான UBT Campus தனது கொழும்பு தலைமை அலுவலகத்தை பிரமாண்டமாக திறந்து வைத்துள்ளது.
இலங்கை முழுவதும் உள்ள மாணவர்களுக்கு தரமான-சர்வதேச தரம் வாய்ந்த கல்வியை வழங்கி-மிகச் சிறந்த தொழில் வல்லுநர்களை உருவாக்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதை உண்மையான நோக்கமாகக் கொண்டு செயற்படும் இந்த கல்வி நிறுவனத்துக்குக் கிடைத்த வெற்றியாகவே இந்தத் திறப்பு விழா அமைந்துள்ளது.
மாணவ சமூகம் மீதான UBT Campus இன் அர்ப்பணிப்பு,உண்மைத் தன்மை மற்றும் சிறந்த மாணவ சமூகத்தின் ஊடாக இந்த நாட்டை கட்டியெழுப்பும் நோக்கம் இந்த விழா மூலம் நூறு வீதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திறப்பு விழா நிகழ்வில் மலேசியாவின் சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட கல்விப் பணிப்பாளர் டாக்டர் ஹசன் பஸ்ரி ஜஹுபர் சாதிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இணை ஸ்தாபகர் எஸ். தௌபீக் அஹமட், தலைமை நிர்வாக அதிகாரி திரு. பி.டி.எம்.நியாஸ் மற்றும் கல்வி விவகாரங்களுக்கான பணிப்பாளர் எச்.அப்துல் சத்தார் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் மூலம் இந்த விழா UBT பல்கலைக்கழகத்தின் கல்வி சிறப்பை நோக்கிய கூட்டு அர்ப்பணிப்பு மற்றும் தூர நோக்கை அடையாளப்படுத்தியது.இந்த மதிப்பிற்குரிய குழுவின் வழிகாட்டுதலின் கீழ், UBT Campus ஆனது Healthcare, Business, IT, and Engineering ஆகியவற்றில் சான்றிதழ் மட்டத்திலிருந்து PhD வரையிலான விரிவான பாடத் திட்டங்களை வழங்குவதற்கான பாரிய பயணத்தைத் தொடங்கியுள்ளது.