103
தாய்லாந்திலிருந்து நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 88 வகையான பிராணிகளுடன் பெண் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வருகை முனையத்தில் வைத்து விவசாயத் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலே, இப்பெண் கைது செய்யப்பட்டதாக சுங்க அதிகாரியொருவர் தெரிவித்தார். பாங்கொக் நகரிலிருந்து வருகை தந்த பெண், அதற்காக தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பெட்டியொன்றில் சூசகமாக பிராணிகளை நாட்டுக்கு எடுத்து வந்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
கட்டுநாயக்க நிருபர்