சர்வதேச நாணய நிதியத்தினூடான கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தமது அரசாங்கத்தின் கீழ் மீளாய்வுக்கு உட்படுத்தப்படுமென்றும் கடனை மீள செலுத்தும் போது அந்த அனைத்து ஒப்பந்தங்களையும் மீண்டும் மீளாய்வுக்கு உட்படுத்தும் உரிமை தமக்கு உள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழு உறுப்பினர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். சில வேளை,அந்த அனைத்து தரப்பினருடனும் கடன் மறு சீரமைப்பு வேலைத் திட்டத்திற்கு புதிதாக செல்ல வேண்டி ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த சந்தர்ப்பத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் தற்போது எதனையும் தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் அதில் நேர்மையற்ற தன்மை நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தற்போதைய அரசாங்கம் சாத்தியமாக முன்னெடுத்து வரும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கையை தமது அரசாங்கத்தின் கீழ்
மீள திருப்ப முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடன் மறு சீரமைப்புக்கு மீண்டும் செல்வதாக என்பது கேள்வி தன்னால் தெரிவிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார் . இந்த கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நேர்மையான முறையில் இடம்பெறுமானால் அதனை அவர்களுக்கு தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றும், எனினும் அந்த நடவடிக்கைகளில் தம்மால் சுமக்க முடியாத அளவு நிபந்தனைகள் இல்லாவிட்டால் அது பிரச்சினையாக அமையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்