கோப்(COPE) குழுவிலிருந்து இதுவரை ஐந்துபேர் மாத்திரமே உத்தியோகபூர்வமாக பதவி விலகியுள்ளதாக பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.
பதவி விலகியுள்ளதாக ஐந்து பேர் மாத்திரமே எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக கோப் குழுவின் சிரேஷ்ட பேச்சாளரொருவர் குறிப்பிட்டார். டிலான் பெரேரா, துமிந்த திசாநாயக்க, எரான் விக்கிரமரத்ன, எஸ்.எம். மரிக்கார் மற்றும் சரித ஹேரத் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே பதவி விலகல் கடிதங்களைக் கையளித்துள்ளதாகவும் அப்பேச்சாளர் கூறினார்.
இவர்கள் தவிர, அனுர குமார திசாநாயக்க, வசந்த யாப்பா பண்டார, இராசமாணிக்கம் சாணக்கியன், தயாசிறி ஜயசேக்கர, காமினி வலேபொட, ஹேஷா விதானகே ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள், கோப் குழுவில் இருந்து பதவி விலகியுள்ளதாக பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளனர்.