Friday, May 10, 2024
Home » மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கொடியேற்ற உற்சவத்தில் கொல்லிமலை சித்தர் சுவாமிகள்

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கொடியேற்ற உற்சவத்தில் கொல்லிமலை சித்தர் சுவாமிகள்

by sachintha
February 2, 2024 6:26 am 0 comment

சித்தர்கள் ஞானபீடம் அறக்கட்டளை மற்றும் பன்னாட்டு கலாசார சர்வசமய ஆய்வுமையம் என்ற அமைப்பின் ஸ்தாபகரான வாழும் கொல்லிமலை சித்தர் சுவாமிகள் இன்று 2 ஆம் திகதி மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக கொடியேற்ற உற்சவத்தில் கலந்துகொண்டு அடியார்களுக்கு அருளாசி வழங்குகின்றார்.

ஆன்மிகமும் பொதுநலத்தொண்டும் சிரமேற்கொண்டு வாழ்ந்து வரும் சித்தர் அவர்கள் தனது சித்தர் பரம்பரையில் 4 ஆவது தலைமுறை சித்தராக பிறந்து வாழ்ந்து வருபவராவார். சித்தர்கள் ஞானபீடம் அறக்கட்டளை ஊடாக அவர் வறிய மக்களுக்கு பல்வேறு உதவிகளைப் புரிந்து வருகிறார்.

தனது பன்னாட்டு கலாசார சர்வசமய ஆய்வுமையத்தின் ஊடாக உலகெங்கும் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற கோட்பாட்டுக்கமைய தனது ஆன்மீக உபதேசமான ‘பிரபஞ்சத்துள் நாம், பிரபஞ்சமே நாம்’ என்ற தனது ஆன்மிக கொள்கைளை உணர்த்தும் வகையில் தனது முத்திரையை பதித்து வருபவர் அவர். பல்லாயிரக்கணக்கான சீடர்களை உலகெங்கிலும் உருவாக்கி, மக்களுக்கு ஆன்மிகக் கருத்துக்களை எளிய முறையில் தன் சித்தர் பாரம்பரிய முறைபடி எடுத்துக்கூறி அனைவரையும் அறவழியிலும் ஆன்மீக நெறியிலும் அழைத்துச் சென்று சிறப்புடன் வாழவைப்பவர். இவரின் நோக்கம், ஒரே உலகம், ஓரே கடவுள், அனைவரும் ஒருதாய் மக்களாய் வாழவேண்டும் என்பதேயாகும்.

இமயமலை, கொல்லிமலை, அகத்தியர்மலை, சஞ்சீவி மற்றும் இந்தியாவிலிருந்து பல்வேறு மலைகளிலிருந்து காணக்கிடைக்காத அரிய சஞ்சீவி மூலிகைகளுடன் இலங்கை வந்திருக்கும் சுவாமிகள் இலங்கை மக்கள் சுபீட்சமாக வாழவும் மனஅமைதி, உடல் ஆரோக்கியம் நீண்ட ஆயுள் பெற்று வாழவும், ஓவ்வொரு மனிதனின் பிறவி இரகசியத்தை அறிந்து அனைத்து பிரச்சினைகளையும் சஞ்சீவி மூலிகை கொண்டும், யாகத்தின் மூலமும், தீர்வு காண செய்கிறார்.

உலக மக்கள் சுபீட்சமாக செல்வச்செழிப்புடன் வாழவும், இலங்கையில் இயற்கை அனர்த்தங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும், பொருளாதார பிரச்சினையிலிருந்து இலங்கையும் மக்களும் மீள்வதற்கும், இலங்கைவாழ் மக்களுக்கு தெய்வஆசி வேண்டியும், அரிய பெரிய சஞ்சீவி மூலிகைகளை கொண்டு கொழும்பில் யாகங்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மக்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கு நிரந்தரத்தீர்வு காணவும், வாழும் கொல்லிமலை சித்தர் சுவாமிகளை சந்தித்து அருளாசி பெற விரும்பும் அடியார்கள் 0701998471, – 0777318030 ஆகிய எண்களுடன் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பிரபஞ்ச ஆச்சாரியார்…

(வாழும் கொல்லிமலை சித்தர் சீடன்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT