மன்னார் மாவட்ட உள்ளுர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் அமுலாக்கத்துடனும் வன்னி மண் அறக்கட்டளை அனுசரணையுடனும் நுங்கு விழா மன்னாரில் நடைபெற்றது.
இவ்விழாவானது இன்று (10) மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட உள்ளுர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் முன்பாக இடம்பெற்றது.
இது தொடர்பாக உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தின் பாரம்பரியமான பனை மற்றும் தென்னை மரங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம்மிடையேயாகும்.
அதிலும் அழிந்துபோகும் பனை மரங்களை யாவரும் அக்கறையுடன் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இவைகள் தொடர்பான எமது மன்னார் மாவட்ட உள்ளுர் உற்பத்தியாளர்களின் காட்சிப்படுத்தலும், விற்பனை நிலையமும் மன்னார் மாவட்ட செயலகப் பகுதியில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் , பிரயோசனம் அடையவும் முக்கிய இடத்தில் இதற்கான அமைக்கப்பட்டுள்ளன.
ஆகவே, பொது மக்களும், பாவனையாளர்களும் எமது உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்குடனும் , எமது மன்னார் வளத்தின் பனை மரங்களின் மகத்துவத்தை எடுத்தியம்பும் ஒரு நோக்குடனேயே இன்று இந்த நுங்கு விழாவை நாங்கள் நடாத்த தீர்மானித்தோம் என என தெரிவித்தனர்.
தலைமன்னார் விஷேட நிருபர் – வாஸ் கூஞ்ஞ