147
சுதந்திரமானதும் திறந்த அடிப்படையிலானதுமான இந்தோ–பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று அமெரிக்காவின் இந்தோ–பசுபிக் பிராந்திய புதிய கட்டளைத் தளபதி சமுவேல் பப்பரோ தெரிவித்துள்ளார்.
இதன் நிமித்தம் எமது நண்பர்களோடும் கூட்டணியினருடனும் இணைந்து செயற்படுவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹவாயில் நடைபெற்ற அமெரிக்க கடற்படையினரின் வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ள அவர், எந்தவொரு நெருக்கடி மற்றும் மோதலின் போதும் நாம் அமைதியான தீர்வுகளுக்காக உழைப்போம் என்றார்.