கொழும்பு தாமரை கோபுரம் அதன் 50,000ஆவது வெளிநாட்டு பார்வையாளரின் வருகையை இன்று (31) கொண்டாடியது.
கடந்த 2022 செப்டம்பர் 15ஆம் திகதி பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது முதல் வருகை தந்த வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கைக்கு அமைய, இன்றையதினம் 50,000ஆவது வெளிநாட்டு பார்வையாளர் இன்று வருகை தந்ததாக, தாமரைக் கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை வகிக்கும் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, கொழும்பு தாமரை கோபுரம் சுற்றுலாத்துறையின் விரிவாக்கத்தை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
இந்த முக்கியமான நிகழ்வைக் கொண்டாடும் வகையில், இலங்கையின் முதன்மையான தேயிலை ஏற்றுமதியாளரான அக்பர் பிரதர்ஸ் நிறுவனத்தின் 50,000ஆவது வெளிநாட்டு பார்வையாளருக்கு பரிசு ஒன்றையும் வழங்கி வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.