Monday, May 20, 2024
Home » அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம்

அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம்

by mahesh
May 8, 2024 9:10 am 0 comment

இலக்கம் 19, மஜிட்புரம், கல்லேல்லை, கதுருவல, பொலன்னறுவை எனும் முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட அஷ் ஷெய்ஹ், அல் ஹாபிழ் அப்துல் அஸீஸ் ஸஹான் (உமைர்) நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் அகில இலங்கை சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதம் முன்னாள் அமைச்சர் ரொசான் ரணசிங்கவினால் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

2010ஆம் ஆண்டு மெல்சிரிபுர அல் உஸ்வதுல் ஹஸனா அரபுக் கல்லூரியில் அல்ஹாபிழ் பட்டமும், 2018ஆம் ஆண்டு வாழைச்சேனை அந் நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா அரபுக் கல்லூரியில் அல்ஆலிம் பட்டமும் பெற்ற அஷ் ஷெய்ஹ் ஏ.ஏ.எம். ஸஹான் (நஹ்ஜி), கல்லேலை பொ / அல் அஸ்ஹர் மஹா வித்தியாலயத்தின் பழைய மாணவருமாவார்.

மர்ஹூம் அல்ஹாஜ் அப்துல் அஸீஸ் , சித்தி மஸீஹா தம்பதிகளின் மகனான அஷ் ஷெய்ஹ் ஸஹான் (நஹ்ஜி), சமூக சேவைகளில் சிறு வயது முதல் ஆர்வம் காட்டிவரும் இளம் ஆர்வலருமாவார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT