Wednesday, May 1, 2024
Home » கைதியொருவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு

கைதியொருவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு

by damith
January 30, 2024 5:55 am 0 comment

பல்லேகல தும்பர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியொருவரிடமிருந்து 04 கிராம் மற்றும் 900 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். கைதி போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்று வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய கைதியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மேலும் பொலிஸார் தெரிவித்தனர். பல்லேகல தும்பர சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளினால் தகவல் வழங்கப்பட்டு விசேட தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

(அக்குறணை குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT