கண்டி கெடம்பே பகுதியில் விகாரைக்கு முன்பாக இருந்த பூக்கடையில் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பூக்களுக்கு அடியில் மறைத்து வைத்து ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போதே, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணின் இரண்டு மகன்களும் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்துக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கண்டி பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரைக்கமைய விசேட பொலிஸ் குழுவொன்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
(அக்குறணை குறூப் நிருபர்)