Home » செஞ்சிலுவை சங்கத்தின் இடைக்கால சபை உறுப்பினர்களுக்கு நியமன கடிதம்

செஞ்சிலுவை சங்கத்தின் இடைக்கால சபை உறுப்பினர்களுக்கு நியமன கடிதம்

by Gayan Abeykoon
May 1, 2024 3:38 am 0 comment

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளைக்கான இடைக்காலச் சபை உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதம்  வழங்கும் நிகழ்வு கடந்த  ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.இதன்போது இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி கிளைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள ஐந்து உறுப்பினர்களுக்கு  இடைக்கால உறுப்பினருக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.

காத்தான்குடி கிளையின் இடைக்கால தலைவர் எம்.ஐ.எம்.சலீம், செயலாளர் எம்.எச்.எம்.தாஹீர், உறுப்பினர்களான ரிபாய் கலீல், கிராம உத்தியோகத்தர் ரசாக்,  ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் ரஊப் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளை செயலாளர் எஸ்.றுத்ராஜா உட்பட இலங்கை செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT