Home » பேராசிரியர் நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை!

பேராசிரியர் நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை!

by Gayan Abeykoon
May 1, 2024 3:28 am 0 comment

 கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு பேராசிரியர் நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நிர்மலாதேவி தரப்பு வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன் வாதிடுகையில், “நிர்மலா தேவியால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார் அளித்த மாணவிகள் சமூகத்தில் எந்த வகையிலும் ஒடுக்கப்படவும் இல்லை, ஒதுக்கப்படவும் இல்லை. அவர்கள் சராசரி மனிதர்களாகவே இயல்பாக வாழ்ந்து வருகின்றனர். நிர்மாதேவியால் அவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. எனவே நிர்மலாதேவிக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பகவதியம்மாள், பேராசிரியர் நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாக அறிவித்தார். மேலும், ரூ.2.45 இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT