மொனராகலை மாவட்டத்தின் செவனகல சந்தி, கினிகல்பலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்து நேற்றுமுன்தி னம் (29) இரவு இடம்பெற்நதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
செவனகல சந்தியிலிருந்து கினிகல்பலஸ்ஸ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றது.
இவ்விபத்தில் செவனகல பிரதேசத்தை சேர்ந்த 35 வயது மற்றும் 46 வயதுடைய இருவரே உயிரிழந்தனர்.
இதேவேளை, அவிசாவளை – கொழும்பு வீதியில் ரக்ஷபான சந்திக்கு அருகில் கார் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், 34 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த நபரே உயிரிழந்தார்.