கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வலயத்தில் புதிய வர்த்தக வாய்ப்பாக தங்க நகை வர்த்தகத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான முன்மொழிவை வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) கம்பனி சமர்ப்பித்துள்ளது.
தற்போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இவ்வசதிகள் இல்லாதுள்ளது. இதனால், உட்செல்லல்,வௌிச்செல்லல் வலயத்தில் “தங்க நகைக் கடையை” அமைப்பதற்கு வரையறுக்கப்பட்ட விமான நிலைய மற்றும் விமான சேவைகள் கம்பனி திட்டமிட்டுள்ளது.
அதற்கமைய, பொருத்தமான செயற்பாட்டாளர் ஒருவரைத் தெரிவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறி முறைமையைக் கடைப்பிடித்து, விலைமனுக் கோரலை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.