Home » இந்திய உயர் ஸ்தானிகர் இன்று ஒலுவில் விஜயம்

இந்திய உயர் ஸ்தானிகர் இன்று ஒலுவில் விஜயம்

by Gayan Abeykoon
May 1, 2024 3:12 am 0 comment

ஒலுவில் துறைமுகம் அமைந்துள்ள பிரதேசத்தைப் பார்வையிடுவதற்கும்,அதன் அபிவிருத்தி தொடர்பில் மேலதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கும் இன்று (01)  இந்திய உயர் ஸ்தானிகர்  சந்தோஷ் ஜா ஒலுவில்

செல்கிறார்.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளின் பேரிலே,அவரது  ஒலுவில் விஜயம் அமைந்துள்ளது.

அம்பாரை  மாவட்ட அரசாங்க அதிபர், அட்டாளைச் சேனை பிரதேச செயலாளர், துறைமுக அதிகார சபை உயர் அதிகாரிகள் ஆகியோர்  உட்பட முக்கிய பிரமுகர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொள்வர்.

வடக்கில் போலவே, கிழக்கு மாகாணத்திலும் ஒலுவில் துறைமுகத்தையும் அதை சூழவுள்ள பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்வது தொடர்பிலும், அப்பிரதேசத்தில் ஏற்படும் கடல் அரிப்பை கட்டுப்படுத்தவும் இந்திய அரசின் ஒத்துழைப்பு பெறப்படவுள்ளது.அங்கு தொழில் பேட்டை ஒன்றை நிறுவுவது தொடர்பிலும் இந்திய  உயர் ஸ்தானிகருடன்   பேச்சு நடத்தவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT