தனது பாட்டியின் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டு மயக்கமுற்ற 15வயது பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நுவரெலியா ஸ்கிராப் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
பாட்டி வீட்டில் இல்லாத நேரத்தில் பாட்டியின் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டு மயக்கமுற்ற நிலையில் அயலவர்களின் உதவியுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, சிறுமியின் தந்தை வேறொரு பெண்ணை திருமணம் செய்து நானுஓயா பிரதேசத்தில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். நுவரெலியா பொலிஸாரின் உதவியுடன் சிறுமியின் சடலம் (29) தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.