Home » கொவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி அரிதான பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்

கொவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி அரிதான பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்

- இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட அஸ்ட்ராசெனகா நிறுவனம்

by Prashahini
April 30, 2024 10:20 pm 0 comment

கொவிஷீல்ட் கொவிட்-19 தடுப்பூசி தயாரித்த அஸ்ட்ராசெனகா நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசி மிக மிக அரிதாக சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் என இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.

அஸ்ட்ராசெனகா நிறுவனமும், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி கொவிஷீல்ட் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது.

இந்த சூழலில் அஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் தடுப்பூசியால் கடுமையான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டி இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஆவணம் ஒன்றை தாக்கல் செய்த அஸ்ட்ராசெனகா நிறுவனம் தங்கள் கொரோனா தடுப்பூசியால் மிக மிக அரிதாக சிலருக்கு ரத்தம் உறைதல் மற்றும் இரத்த தட்டுகள் குறைதல் போன்ற பக்கவிளைவுகளை ஏற்பட்டுள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT