Home » ஐ.தே.க மற்றும் இ.தொ.காவின் கூட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பு

ஐ.தே.க மற்றும் இ.தொ.காவின் கூட்டங்களில் ஜனாதிபதி பங்கேற்பு

by Gayan Abeykoon
May 1, 2024 3:02 am 0 comment

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள மே தினக் கூட்டம் இன்று (01) காலை 10.00 மணிக்கு கொட்டகலை பொது மைதானத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் ஆரம்பமாகிறது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பில், ஜனாதிபதி இதில் கலந்து கொள்கிறார். பெருந்தோட்ட மக்கள் பெருந்திரளானோரின் பங்கேற்புடன் இந்த மே தினக் கூட்டமும் பேரணியும் நடைபெறவுள்ளது.

மலையக சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப் பெரிய தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸாகும். இதன் பின்னர் இன்று (01) பிற்பகல் கொழும்பு மாளிகாவத்தை  பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின், மே தினக் கூட்டத்திலும் ஜனாதிபதி இணைந்து கொள்ள உள்ளார்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT