257
இன்றையதினம் (18) நாட்டின் கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழை அற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் , சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் சாத்தியம் காணப்படுகின்றது.