Thursday, May 9, 2024
Home » சட்டவிரோதமான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

- 520 போதை மாத்திரைகள் மீட்பு

by Prashahini
January 17, 2024 9:20 am 0 comment

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரு தொகுதி போதை மாத்திரைகளுடன் நேற்று (16) மாலை குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் தங்கியிருப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் பிரதேச பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது குறித்த வீட்டில் இருந்து 520 சட்டவிரோத போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது இந்தியாவில் இருந்து கடல் வழியாக குறித்த மாத்திரைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த நபரிடம் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மன்னார் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT