அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக செழிப்பாக காணப்பட்ட வயல் நிலங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். தற்சமயம் மழை ஒரளவு குறைவடைந்து காலநிலை ஒரளவு சீராகி வருவதை அவதானிக்க முடிகிறது.
மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பியுள்ளது.
பெரும்பாலான வீதிகளில் வெள்ளம் வடிந்து காணப்பட்டன. இருந்த போதிலும் தாழ் நிலப்பிரதேசங்களில் இன்னமும் வெள்ளநீர் தேங்கி நிற்கின்றது.
பெரும்பாலான வயல் நிலங்களில் வெள்ளம் இன்னும் இருப்பதால் அதை கைவிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இம்முறை விளைச்சல் மிகவும் குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
(காரைதீவு குறூப் நிருபர்)