197
முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவந்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் 2,327 குடும்பங்களை சேர்ந்த 6,916 பேர் பாதிக்கப்பட்டதுடன், 412 குடும்பங்களை சேர்ந்த 1,215 பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
மழை சற்று குறைவடைந்ததையடுத்து வெள்ளநீர் வடிந்தோட ஆரம்பித்துள்ளது. ஏழு இடைத்தங்கல் முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்த 412 குடும்பங்களை சேர்ந்த 1,215 பேரும் அவர்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
மாங்குளம் குறூப் நிருபர்