149
தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் குழாம் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் ஒப்புதலுக்காக இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் அனுப்பப்பட்டுள்ளது.
இதில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டி மற்றும் உலக கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளை இலக்கு வைத்து 22 வீரர்கள் மற்றும் 12 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அடுத்த ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டி டுபாய் நகரில் எதிர்வரும் ஏப்ரல் 23 தொடக்கம் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அதேபோன்று பெரு நாட்டின் லீமா நகரில் அடுத்த உலக கனிஷ்ட (20 வயதுக்கு உட்பட்ட) மெய்வல்லுனர் போட்டி 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 26 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.