கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் இணைந்து நடத்திய பிரதேச கலை இலக்கிய விழா, அப்பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளர் நஹீஜா முஸாபீர் தலைமையில் நேற்று முன்தினம் புதன்கிழமை (20) சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன், மாவட்ட, பிரதேச மட்டங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அகமது ஷாபிர் கலந்துகொண்டார். அத்துடன் கணக்காளர் எஸ்.எல். றிபாஸ், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.மஜித், சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ.எம்.ஹமீட், முகாமையாளர் எஸ்.எல்.அஸீஸ், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம்.றின்ஸான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திராய்க்கேணி தினகரன் நிருபர்