Wednesday, May 1, 2024
Home » றைகம் தோட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கிழக்கு ஆளுநர் வேண்டுகோள்

றைகம் தோட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கிழக்கு ஆளுநர் வேண்டுகோள்

by Rizwan Segu Mohideen
December 9, 2023 11:57 am 0 comment

இங்கிரிய, றைகம் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலகவை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் திருக்கேஷ் செல்லசாமி, ஜீவந்தராஜா, மாக்ரட் மற்றும் தோட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது, றைகம் தோட்ட பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கவனம் செலுத்துமாறு செந்தில் தொண்டமான் மேல் மாகாண ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அதற்கு சாதகமான பதில் வழங்கிய மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக, மக்களின் பாதுகாப்பிற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT