திருகோணமலையில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக நீரிறைக்கும் இயந்திரக் குழாய்கள் மற்றும் விசிறல் நீர்ப்பாசனக் கருவிகளை திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (29) வழங்கி வைத்தது.
இந்தக் குடும்பங்கள் தத்தமது வாழ்வாதாரத்துக்கான வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதற்காக இந்த உதவி வழங்கப்பட்டது.
இதன்போது நான்கு குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டதுடன், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான மேற்படி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இம்மாதத்தில் இரண்டாவது முறையாக இந்த உதவி வழங்கப்பட்டதுடன், இவற்றை திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் சண்முகம் குகதாசன் வழங்கி வைத்தார்.
தம்பலகாமம் குறூப், அன்புவழிபுரம் தினகரன் நிருபர்கள்