மலையக பிரதேசங்களிலும் இம்முறை மே தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மலையக பெருந்தோட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.
அதன்படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் மேதின நிகழ்வுகள் கொட்டக்கலை நகர மைதானத்தில் நடைபெறவுள்ளதாக இ.தொ.கா ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.இந்நிகழ்வில் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தொழிளாளர் தேசிய சங்கத்தின் மேதின கூட்டம் தலவாக்கலை நகர சபை மைதானத்தில் தலைவர் திகாம்பரம் தலைமையில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம் மேதின பேரணியும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்கவுள்ளதுடன் தொழிளாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவர் உதயகுமார் எம்.பி, செயலாளர் பிலிப் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மேதின நிகழ்வுகள் கொழும்பில் ,நுவரெலியாவிலும் நடைபெறவுள்ளன.