80
தற்போது அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெல் விதைப்புப் பணி மிகவும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இம்முறை வெள்ளை அரிசி நெல்லினத்தை விதைப்புச் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
கடும் உஷ்ணமான காலநிலைக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் வெள்ளை அரிசி நெல்லினம் உள்ளதாகவும் ஆகையால் அதையே விதைப்பதாகவும், விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இம்முறை வெள்ளை அரிசி நெல்லினத்தை விதைப்புச் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுவதால், அம்பாறை மாவட்டத்தில் வெள்ளை அரிசி விதை நெல்லுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அட்டாளைச்சேனை மத்திய நிருபர்