Tuesday, May 21, 2024
Home » மே தின இசை நிகழ்ச்சிக்காக இந்திய பாடகர்கள் இலங்கை வருகை

மே தின இசை நிகழ்ச்சிக்காக இந்திய பாடகர்கள் இலங்கை வருகை

by Prashahini
April 30, 2024 2:57 pm 0 comment

அரசாங்கத்தினால் நாளை (01) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய மே தின பேரணியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் பாடுவதற்காக இந்தியாவிலிருந்து பாடகர்கள் குழுவொன்று இன்று (30) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

குறித்த இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக பிரபல பாடகர்களான விஜய் பாலகிருஷ்ணன், ரம்யா NSK, டேனியல் ஜெயராம், ரேஷ்மா ஷ்யாம் உள்ளிட்ட பிரபலங்கள் வருகை தந்துள்ளனர்.

இக்குழுவினர் இன்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL-122 மூலம் இந்தியாவின் சென்னையில் இருந்து 11.40 மணியளவில் புறப்பட்டு பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அதிகாரிகள் இக்குழுவினரை வரவேற்றனர்.

இந்த இசை நிகழ்ச்சியானது நாளை கொழும்பு மாளிகாவத்தை P.D சிறிசேன விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் நாளை (01) சத்யா பிரகாஷ் தர்மர் மற்றும் வர்ஷா போன்ற இந்திய இசைக்கலைஞர்களும் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT