மத்திய மாகாண கல்வி சேவையில் நீண்டகாலமாக சேவையாற்றிய திருமதி அருந்ததி சத்தியேந்திரா ஓய்வுப் பெறுவதை முன்னிட்டு அவரது சேவைகால பிரியாவிடை, கெளரவிப்பு நிகழ்வு ஹற்றன் கிருஸ்ணபவன் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
ஹற்றன் வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர்.விஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஹற்றன் கல்வி வலயத்துக்குட்பட்ட பிரதி கல்விப்பணிப்பாளர், உதவிக்கல்வி பணிப்பாளர், அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், வளவாளர்கள், ஆசிரியர்கள், காரியாலய உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 40 ஆண்டு காலம் கல்வித்துறையில் சேவையாற்றிய சத்தியேந்திரா கல்வி அமைச்சின் உதவி செயலாளர், மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர், வலயக்கல்வி பணிப்பாளர், சீடா வள நிலைய இணைப்பாளர், என பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். இவர் மத்திய மாகாணத்தில் கல்வி நிர்வாக சேவை பரீட்சையில் சித்தி பெற்ற முதல் தமிழ் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.
(நோட்டன் பிரிட்ஜ் நிருபர்)