பலாலி விமான நிலைய அபிவிருத்தியில் தனியார் முதலீடுகளுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
மன்னார்- இராமேஸ்வரம் கப்பல் சேவை தொடர்பான முதலீடுகளை தனியார் துறைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது
பலாலி விமான நிலைய…
தொடர்பில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகத்துறை, துறைமுகங்கள், கப்பல்துறை, விமான சேவைகள் அமைச்சுகள் மீதான வரவு -செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தில் இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் ஊழல் நிதி மோசடி தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அவர் வெகுவிரைவில் உரிய தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.
லோரன்ஸ் செல்வநாயகம்