Thursday, May 9, 2024
Home » யாழ். போதனா வைத்தியசாலையில் 1,000 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை

யாழ். போதனா வைத்தியசாலையில் 1,000 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை

by mahesh
November 1, 2023 8:10 am 0 comment

உலக பார்வை தினத்தையொட்டி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1,000 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் நடவடிக்கை நேற்று முன்தினம் திங்கட்கிழமை (30) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சை வைத்திய நிபுணர் எஸ்.மலரவனின் வழிப்படுத்தலின் கீழ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (03) வரை கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

பிரித்தானியாவின் புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட இதன் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்துகொண்டார்.

நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட சிகிச்சையில் யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலிருந்து சுமார் 5 பேருக்கும் அநுராதபுரம், மதவாச்சி, பதவியாவிலிருந்து சுமார் 170 பேருக்கும் கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கோப்பாய் குறூப், யாழ். விசேட நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT