178
யாழ்ப்பாண சிறைச்சாலைக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு எட்டு வருடங்கள் பூர்த்தியாகியதை தொடர்ந்து யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் சிறைச்சாலை வளாகத்துக்கு முன்பாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை (30) இரவு நிகழ்வொன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் மொஹான் கருணாரட்னவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது, யாழ். சிறைச்சாலைக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு, எட்டாவது வருடத்தைக் குறிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட கேக் வெட்டப்பட்டது. இந்நிகழ்வில் யாழ். சிறைச்சாலையின் சிரேஷ்ட அதிகாரிகள், சிறைச்சாலை அலுவலர்கள், சிறைச்சாலைக் காவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கோப்பாய் குறூப் நிருபர்