Saturday, April 27, 2024
Home » வவுனியாவில் திருடப்பட்ட ஐம்பொன் சிலை யாழில் மீட்பு

வவுனியாவில் திருடப்பட்ட ஐம்பொன் சிலை யாழில் மீட்பு

by mahesh
November 1, 2023 8:00 am 0 comment

வவுனியாவில் திருடப்பட்டு, யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான ஐம்பொன் சிலையொன்றை நேற்று முன்தினம் திங்கட்கிழமை (30) பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் இந்தச் சிலை மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தமக்கு கிடைத்த இரகசியத் தவலைத் தொடர்ந்து, அங்கு தாம் சென்ற போது, சிலையைக் கடத்திய சந்தேகநபர் தப்பிச் சென்றதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சிலையைக் கைப்பற்றி, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT