Tuesday, April 30, 2024
Home » தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 45 நாட்களுக்குள்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 45 நாட்களுக்குள்

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு

by damith
October 16, 2023 7:28 am 0 comment

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகளை 45 நாட்களுக்குள் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நேற்று நடைபெற்றதுடன் அதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடும் மழையுடனான சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் நாடளாவிய ரீதியில் 2888 மத்திய நிலையங்களில் நேற்று தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்றதுடன் மாணவர்கள் பல்வேறு அசௌகரிங்களை எதிர் நோக்க நேர்ந்தாலும் பெரும் ஆர்வத்துடன் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT