களுத்துறை மாவட்ட மத்துகம கல்வி வலயத்திற்கு உட்பட கலைமகள் தமிழ் தேசிய பாடசாலையின் ஆசிரியர் தின விழா கடந்த வெள்ளிக்கிழமை (06) காலை பாடசாலை பிரதான மண்டபத்தி அதிபர் வீ. சசிகுமார் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்வைபவத்தின் போது IDM நேஷன் சர்வதேச நிறுவனத்தின் இலங்கை மற்றும் இங்கிலாந்து தலைவர் கலாநிதி ஜனகன் விநியாகமூர்த்தி பிரதம அதிதியாகவும் மற்றும் IDM நேஷன் பல்கலைக்கழக நிறுவன சர்வதேச நடவடிக்கைகள் சமூக நற்பணி முதல்வர் மற்றும் பணியாளர் வணக்கத்துக்குறிய அருட் தந்தை சந்துரு பெர்ணான்டோ கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு வைபவத்தை மேலும் சிறப்பித்தனர்.
இதன்போது ஆசிரியர்களுக்கு நினைவு சின்னங்களை வழங்கி வைத்துடன் கருத்து தெரிவித்த IDM நேஷன் தலைவர், கலாநிதி ஜனகன் விநியாகமூர்த்தி அவர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை பயன் உள்ளதா அமைத்துக் கொள்வதற்கான பல்வேறு நற்சிந்தனைகளுடன் கூடிய சிறப்பு சொற்பொழிவு ஒன்றையும் வழங்கினார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் பாடசாலை அதிபர் வீ.சசிகுமார் முன்வைத்த பல்வேறு வேண்டுகோளையும் கேட்றிது அது தொடர்பாக எதிர் வரும் காலப்பகுதியில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்ததுடன் வைபவத்தின் இறுதியில் இடம்பெற்ற ஆரியர்களுக்கான விசேட விருந்து உபசாரத்திலும் கலந்துக் கொண்டார்.
களுத்துறை சுழற்சி நிருபர்