தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தில் உலகளாவளாவிய ரீதியிலும், இலங்கையிலும் வாழும்
அனைத்து சமூகங்களும் இடையிலும் ஐக்கியமும்,சமத்துவமும், தேசிய ஒருமைப்பாடும் மிளிர வேண்டுமென, IDMNC சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி தைப்பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பொருளாதார இன்னல்கள் நீங்கி எம் நாட்டில் தை பிறந்ததிலிருந்து அனைவருக்கும் வழி பிறக்கட்டும்.
தை பிறந்தால் வழி பிறக்கும்
என்பது தமிழர்களின் ஐதீகம்
அந்தவகையில் பிறந்திருக்கும் தைத்திருநாளில் மந்தநிலை நீங்கி அனைத்து மக்களும் சுபீட்ச்சத்துடன் வாழும் வழி பிறக்கும் என்னும் நம்பிக்கை தனக்கு உள்ளது எனவும் தான் அதற்காக சூரியபகவானை பிரார்த்திப்பதாகவும் மேலும் தனது வாழ்த்து குறிப்பிட்ட அவர், இந்த ஆண்டில் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்துறை சிறக்க சூரியபகவான் துணை நிற்பார் என்றும் கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி தனது நம்பிக்கையை இந்த வாழ்த்துச் செய்தியில் வெளியிட்டார்.