Thursday, May 9, 2024
Home » இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் ஒருவர் உயிரிழப்பு

இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் ஒருவர் உயிரிழப்பு

by Prashahini
August 25, 2023 11:59 am 0 comment

கொழும்பு, மட்டக்குளி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்குளி, ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையில் நேற்று இரவு (24) இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மோதலின் போது மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர்.

இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்ற நிலையில், வெட்டுக்காயங்களுடன் வீதியில் கிடந்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின் அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, காயமடைந்த மற்றுமொருவரான 28 வயதுடைய இளைஞர் சிகிச்சைக்காக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT