Tuesday, April 30, 2024
Home » மாணவர்களுக்கான வட்டியில்லா கடன் திட்டம் இன்று முதல் அமுல்

மாணவர்களுக்கான வட்டியில்லா கடன் திட்டம் இன்று முதல் அமுல்

by admin
July 4, 2023 11:00 am 0 comment

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

2019, 20 மற்றும் 21ஆம் ஆண்டுகளில் உயர்தரத்தில் கல்வி கற்ற 5,000 மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்துக்கான விண்ணப்பம் இன்று செவ்வாய்க்கிழமை (04) முதல் கோரப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். உரிய கடன் தொகையை பெறும் மாணவர்கள் வேலைவாய்ப்பு சார்ந்த உயர் கல்வியை கற்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,

விண்ணப்பதாரர்கள் இன்று 4ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்துக்குள் உள்ளீர்க்கப்படுவோர் மூன்று வருட உயர்நிலைக் கல்வியை முடித்திருந்தால் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT