அக்கரைப்பற்று மாநகர சபையின் கீழ் இயங்கும் மத்திய வாசிகசாலை மற்றும் ஹல்லாஜ் வாசிகசாலை ஆகியவற்றில் நடைபெற்ற தேசிய வாசிப்பு மாத போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிப் பெற்ற பாடசாலை மாணவர்கள், வீட்டு நூலகப் போட்டி வெற்றியாளர்கள், 2023 ஆம் ஆண்டின் சிறந்த வாசகர்கள் தெரிவு செய்யப்பட்டு பரிசு, நினைவு சின்னம், சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபீ தலைமையில் அக்கரைப்பற்று ஹல்லாஜ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மாநகர சபை ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபீ மற்றும் நூலகர் ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தனர். இதன்போது பாடசாலை மாணவர்கள், வாசகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(அக்கரைப்பற்று மத்திய நிருபர்)