இலங்கை ரூபவாஹினி சேவையில் நாளை இரவு 9.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஒளிபரப்பாகும் “சந்துரு சுயமிய” எனும் நிகழ்ச்சியில், இலங்கையின் புகழ்பெற்ற தமிழ், சிங்கள பின்னணிப் பாடகர் கலாபூஷணம் முத்தழகு சூரியகுமார் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சி தனது 66 ஆண்டு கால இசைத்துறை வரலாற்றை ஞாபகப்படுத்துவதாக அமைந்துள்ளதென பின்னணிப் பாடகர் கலாபூஷணம் முத்தழகு சூரியகுமார் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இவருடன் இலங்கையின் புகழ்பெற்ற தமிழ், சிங்கள பின்னணிப் பாடகி கலாபூஷணம் திருமதி எஸ் கலாவதியும் இணைந்து பாடி சிறப்பிக்கவுள்ளார்.
பிரபல வானொலி, தொலைக்காட்சிப் புகழ் சிதத் சோமசுந்தர இசை வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியை பிரபல அறிவிப்பாளர் பபகெர ரோகண தொகுத்து வழங்குவார். இந்த ரூபவாஹினி நிகழ்ச்சியை ரங்கா பிரேமரத்ன தயாரித்து வழங்குகிறார்.