கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன் நேற்று (14) பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த
இந்திய பாதுகாப்பு ஆலோசகரான ஆனந்த் முகுந்தனுக்கு
பாதுகாப்புச் செயலாளர் கமல்குணரட்ன வரவேற்பளித்ததுடன், முக்கிய விடயங்கள் குறித்து சிநேகபூர்வமாக கலந்துரையாடினார்.
இதன்போது, கெப்டன் முகுந்தனின் புதிய நியமனம் குறித்து பாதுகாப்புச் செயலாளர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த சந்திப்பை நினைவு கூரும் வகையில், நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தம்மிக்க வெலகெதரவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.
(ஸாதிக் ஷிஹான்)