124
கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய ஆட்சேர்ப்புக்காக 60,000 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் அடுத்த வாரத்துக்குள் இதற்கான பணி ஆரம்பிக்கப்படுமெனவும், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இதேவேளை கல்வியியற் கல்லூரிகளில் பயிற்சி முடித்த 4,160 பேர் கல்லூரிகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும், அமைச்சர் கூறினார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு 23,005 பேரை பணிக்கு அமர்த்தப்படும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.