Wednesday, May 8, 2024
Home » புகையிரத மேடைக்குள் சிக்கிய இரு பெண்கள்

புகையிரத மேடைக்குள் சிக்கிய இரு பெண்கள்

- மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மீட்பு

by Rizwan Segu Mohideen
April 26, 2024 7:16 pm 0 comment

புகையிரதம் நிற்கும் முன்னர் அதில் ஏற முயன்ற இரண்டு யுவதிகள் புகையிரத மேடைக்குள் சிக்கிய நிலையில் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மீட்கப்பட்டுள்ளனர்.

இன்றையதினம் (26) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து கண்டி நோக்கி புறப்படவிருந்து புகையிரதமொன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலைய மேடைக்கு பிற்பகல் 4.35 மணியளவில் வந்தடைந்த போது, புகையிரதம் நிற்கும் முன்னர் ஏறிய இரண்டு பெண்களே இவ்வாறு அதில் சிக்கியுள்ளனர்.

இரு புகையிரத பெட்டிகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட இரு பெண்களில் ஒருவரை மீட்க மிகுந்த நேரம் எடுத்ததோடு, அவர் பலத்த காயமடைந்த நிலையில், பிற்பகல் 5.00 மணியளவில் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மற்றைய யுவதிக்கு பலத்த காயங்கள் எதுவுமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT