Sunday, May 19, 2024
Home » மலேஷியாவிற்கு பணிக்கு சென்ற இளைஞன் உயிரிழப்பு

மலேஷியாவிற்கு பணிக்கு சென்ற இளைஞன் உயிரிழப்பு

- பொயிலர் வெடித்ததால் ஏற்பட்ட துயரம்

by Prashahini
May 7, 2024 7:27 pm 0 comment

மலேஷியாவிற்கு பணிக்கு சென்ற மஸ்கெலியா பகுதியில் உள்ள இளைஞர் அங்கு பொயிலர் வெடித்து மரணித்துள்ளார்.

இவ்வாறு மரணித்தவர் மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட மோட்டிங்ஹேம் பிரிவைச் சேர்ந்த 24 வயதான துரைராஜ் ராஜ்குமார் டேவிட்சன் என்பவர் என தெரிய வந்து உள்ளது.

மகன் மரணித்த விடயம் கேள்வி பட்ட தந்தை கதறி அழுத வண்ணம் உள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையில் இருந்து மலேஷியாவில் உள்ள தண்ணீர் போத்தல் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றுக்கு பணிக்கு சென்ற வேளையில் அங்கு நேற்று முன்தினம் (05) பணியாற்றி கொண்டு இருந்த வேளையில் இந்த துயரம் ஏற்பட்டு உள்ளது என தெரியவந்துள்ளது.

அவரது உடலம் இலங்கைக்கு கொண்டு வருவதற்காக ஏற்பாடுகளை அவரது உறவினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT