46
புத்தளம் உப்பு உற்பத்தியாளர்களுக்கு சொந்தமான காணியை ஆக்கிரமிக்க சிலர் எடுக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி பாரிய ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை காலை (22) உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தின் தலைவரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான பீ.எம்.ரனீஸ் பதூர்தீன் தலைமையில் புத்தளம் மாவட்ட செயலகத்துக்கு அருகாமையில் நடைபெற்றது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம்.இல்யாஸ் உள்ளிட்ட உப்பு உற்பத்தியாளர் நலன் புரிச்சங்க அங்கத்தவர்கள், பொதுமக்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
புத்தளம் தினகரன் நிருபர்