135
கசகஸ்தான் அணியை 45–7 புள்ளிகளால் வீழ்த்தி ஆசிய ரக்பி சம்பியன் பட்டத்தை இலங்கை ரக்பி அணி வென்றது.
கொழும்பு குதிரைப்பந்தய திடல் மைதானத்தில் நேற்று முன்தினம் (4) நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி ஏழு டிரைகளை பெற்று வெற்றியை உறுதி செய்தது. இதன்மூலம் சர்வதேச தடையில் இருந்து திரும்பிய இலங்கை அணி முதல் முறை ரக்பி இறுதிப் போட்டி ஒன்றில் வெற்றியீட்டியுள்ளது. இதில் மூன்றாவது இடத்திற்காக நடந்த போட்டியில் இந்திய அணியை கட்டார் 34–25 புள்ளிகளால் வீழ்த்தியது.