Monday, May 6, 2024
Home » குவைத் வாழ் புத்தளம் மக்களின் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வு

குவைத் வாழ் புத்தளம் மக்களின் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வு

by Gayan Abeykoon
April 24, 2024 7:41 am 0 comment

குவைத்தில் வாழும் புத்தளம் மாவட்ட மக்களுக்கான  பெருநாள் ஒன்றுகூடல் அண்மையில்  மாலிய கடற்கரையோர வளாகத்தில் நடைபெற்றது.

இந்த ஒன்றுகூடல் தூய தேசத்திற்கான அமைப்பின் உறுப்பினர்களினால் முழுமையாக ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டது.

இவ் ஒன்றுகூடலில் புத்தளம் மாவட்ட மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து சமூகம் சார்ந்து வேலைகள் செய்வதற்காக “Kuwait Puttalamese” என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டது.

தூய தேசத்துக்கான அமைப்பினால் புலம் பெயர்ந்து வாழும் புத்தளம் மாவட்ட மக்களுக்கான அமைப்புகள் உலகம் முழுவதும் ஸ்தாபிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒன்றுகூடலில்  அழைப்பை ஏற்று வருகைதந்த அத்தனை புத்தளம் மாவட்ட உறவுகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக தூய தேசத்துக்காக அமைப்பின் சார்பாக எஸ்.எம்.இஷாம் மரைக்கார் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

புத்தளம் தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT