Saturday, May 18, 2024
Home » நாட்டின் ஒரு சில பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழை

நாட்டின் ஒரு சில பகுதிகளில் மாலையில் அல்லது இரவில் மழை

- எதிர்வரும் சில நாட்களுக்கு வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக உஷ்ணம்

by Rizwan Segu Mohideen
May 5, 2024 7:36 am 0 comment

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை, எதிர்வரும் சில நாட்களுக்கு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் அதிக உஷ்ணமான நிலை காணப்படும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Weather-Forecast-May-05-2024

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT